நெல்லை வட்டார நடையில் கருத்தாளத்துடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி, கற்பனை கலந்து படைக்கப்பட்டிருக்கிறது. தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல செயல்களை பாராட்டுவதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் சமுதாய ஒழுங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ கதையில் சிவனுப்பிள்ளையும், ‘செல்லம்மா சித்தி’ கதையில் சித்தியும் மனதில் பதிந்து நிற்கின்றன. ஒவ்வொரு கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை பாதை மாறாமல் பயணம் செய்வது கவனத்தை ஈர்க்கிறது. சந்தித்த மனிதர்களையும், குணாதிசயங்களையும் கதைகளாக்கி இருப்பது ஒன்றி போகச் செய்கிறது. சமூகத்தை பிரதிபலிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு