அறிவியல் கருத்துகளை கதை வடிவில் எளிய நடையில் கற்பிக்கும் நுால்.
சிறுவர்கள் நீராக மாறி, ஆவியாகி மேகத்தில் கலந்து, மீண்டும் மழையாக விழுவது, அடர் பனியாய் உறைவது, வெயிலில் கரைவதை சிறப்பை விவரிக்கிறது. கடலில் உப்புநீர், மழையாய் மாறும் விந்தையை சொல்கிறது. அது ரத்தம் வழியாக இதயம், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடலில் பயணிப்பதை விவரிக்கிறது.
மந்திரக் கம்பளத்தில் சூரியனை சுற்றி வரும் பயணம் இனிமையாக உள்ளது. ஒலி காற்றில் எதிரொலிப்பதை பலுான் வழி அறிவூட்டுகிறது. சிறுவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை ஊட்டும் நுால்.
– மதி