ஊருக்கு நல்லது செய்யவோ, குடும்பத்திற்கு நல்லது செய்யவோ வீரமுடன் போராடி உயிரை விட்டோரை தெய்வ நிலைக்கு உயர்த்தி வணங்கும் வழக்கத்தை மையப்படுத்தியுள்ள நுால். கிராம தெய்வங்களின் வழிபாடு, படையல் சிறப்பு பற்றி கூறுகிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் திரவுபதி அம்மன், மத்திய மாவட்டங்களில் மங்கலதேவி கண்ணகி, தென் மாவட்டங்களில் வணங்கப்படும் தெய்வங்கள் பற்றி தெளிவாக விளக்குகிறது.
ஆகம விதிக்கு உட்படாமல் மக்கள் வாழ்நிலை, மனநிலையுடன் ஒன்றி கோவில்கள் அமைந்திருப்பதை எடுத்துரைக்கிறது. வேட்டை, திருட்டு போன்ற நிகழ்வுகள் பற்றி குறிப்பிடுகிறது. தமிழர் வாழ்வுடன் இணைந்த தெய்வங்களை பற்றி அறிய உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்