இலங்கை தமிழர் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல்.
மணி தியாலம் என்றால் மணி நேரம் என்பது அர்த்தம். இது மாதிரி தமிழ் நடை, நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஆனால், விவரிப்பு தெளிவாக புரிகிறது. பேய்க் கதை என்பது போல் துவங்குகிறது. புதுவீடு என்றால் பேய் இருக்கும் என்பதாக காட்டுகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக மத சடங்குகளை முறைப்படி முன்வைக்கிறது.
பின் கதையில் பேய் விலகியது போல் தோன்றுகிறது. ஆனாலும் பூர்வீக மதச் சடங்குகள், மந்திரிக்கும் பூசாரிகள் என பேயின் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது. அது தொடர்பான விவரணை தொடர்ந்து, நவீன ஹிப்னாடிசத்துக்கு தாவுகிறது. அதிலிருந்து பறக்கும் தட்டு, ஏலியன் என, புது வடிவம் எடுக்கும் வித்தியாசமான நுால்.
– சீத்தலைச் சாத்தன்