மனிதர்களின் பன்முக உணர்வுகளை எளிய நடையில் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஏழ்மை கண்டு இரங்கிய இணை பிரியா நட்பு, திறமை கண்டு நிறம் மாறிய விதம், கிராமத்தில் கிடைக்கும் இயற்கையான மனிதநேயம், மனித நேயம் மரித்து விடாத அரசு செவிலியர், பறவைக் கூட்டிலிருந்து சிந்தும் குப்பையை தடுக்க பறவையை கொன்ற வன்மம் என பலவகை கருவை உடையன.
பதவிக்காக தொண்டனை காவு கொடுக்கும் அரசியல், வேலியே பயிரை மேய்ந்த கதை என, அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் வழியாக வினோத குணாதிசயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சிக்கு வசதிகள் தேவை இல்லை என்பது சின்னஞ்சிறு கதைகள் வழியாக விளக்கப்பட்டுள்ளது. மனித மனதை பழுது நீக்கி பண்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்