சிறுவர் – சிறுமியரின் சிந்தனையை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கு விருந்து தரும் வகையில் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தக தொகுப்பில், 15 சிறுகதைகள் உள்ளன. தவளை இளவரசி, நீ சாதிக்க பிறந்தவன், அடக்கம் உயர்வைத் தரும், தங்க வேட்டை என, வளமிக்க தலைப்புகளே கதைகளில் உட்கருத்தில் உள்ள இயல்பை உணர்த்துகின்றன.
மனிதர்களுடன், விலங்குகளையும் கதாபாத்திரங்களாக்கி கற்பனை மிளிரும் விதமாக படைக்கப்பட்டு உள்ளன. கதைகளில் எளிய நடையிலான உரையாடல் வாசிப்போரை கவருகிறது. சமூதாயத்தில் அறங்களை முறையாக கடைபிடித்தால் அருமையாக வாழலாம் என அறிவுறுத்துகிறது. சிறுவர் – சிறுமியிரின் கற்பனை திறனை துாண்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– மதி