குடும்ப பொறுப்புகளை கையிலெடுக்கும் இளைஞரின் போராட்டத்தை கூறும் குறுநாவல்.
வாழ்க்கை பயணம் விரும்பியபடி இல்லாமல் வேறு திசையில் செல்வதை கதாபாத்திரம் வழியாக கூறுகிறது. குடும்ப பொறுப்பும், பொருளாதார பகிர்வும் குறிப்பிட்ட வயதை எட்டும்போது தானாக வர வேண்டும் என்கிறது.
இளமையில், குடும்பத்திற்காக சுமக்கும் பாரத்தை குறைக்க, ஆறுதல் சொல்வோர் இருந்தால் சலிப்பு ஏற்படாது என குறிப்பிடுகிறது. எளிய வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை கூறுகிறது. சமூக அந்தஸ்து தேடி ஓட வைக்கும் அவலத்தையும் எடுத்துரைக்கும் அற்புத நுால்.
– டி.எஸ்.ராயன்