திருப்புத்துார் ஊர் பெயரை இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளுடன் நிறுவும் நுால்.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் – மருதுபாண்டியருக்கும் நடைபெற்ற போர் திருப்புத்துாரில் நடந்ததை உரைக்கிறது. போரின் முடிவில் மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்ட நிகழ்வை விவரிக்கிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் இங்கே பரவியிருந்ததை வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவுகிறது.
இவ்வூரில் திருத்தளிநாதர் உள்ளிட்ட 10 கோவில்கள் இருக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது. திருத்தளிநாதர் கோவில் தொடர்பான செய்திகளை தொகுத்துத் தருகிறது. ஒரு ஊரின் வரலாறு எழுதும் முறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்