ஜோதிடம், ஆன்மிகம் பக்கம் நின்று, மனதின் பங்களிப்பை விளக்கும் நுால்.
ஜாதகம் வழி ஜோதிடத்தை தெரிந்து கொள்வது போல, பிரசன்னம் என்ற முறையிலும் அறியலாம் என்கிறது. சகுனங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் தருவதாக கூறுகிறது. கர்மாவின் அடிநாதம் மனமே என்கிறது. முன்னோர் வாழ்வை பொது அமைப்பில் ஒருங்கிணைத்து முறைப்படுத்தும் அற்புத இடமே கோவில் என விவரிக்கிறது.
கோவில் தாயின் கருவறையைக் குறிப்பதாக உணர்த்துகிறது. அதுவே புனிதத்தின் உச்சம் என்கிறது. கும்பாபிஷேகம் பற்றி விளக்கி, அதில் உயிர்நாடியாக மனம் இருப்பதாக சொல்கிறது. மன உணர்வுகளுக்கு சூழலே முக்கியக் காரணம் என்கிறது. மனதின் ஆற்றலை உணர வைக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து