புற்றுக்கோவில் மகிமையை எடுத்துக் கூறும் நுால். அது அமைந்த இடம், செல்லும் வழி, திறந்திருக்கும் நேரம் மற்றும் வரலாற்று செய்திகளை கூறுகிறது.
திருவள்ளூர் அருகில் உள்ள புட்லுார் என்ற ஊர் பெயர், புற்றுார் என தெளிவுபடுத்துகிறது. சென்னை சாலிகிராமம் மற்றும் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் புற்றுக்கோவில் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கிறது.
கோவில்களில் புற்று மண்ணை பிரசாதமாகப் பயன்படுத்துவது, ஆடி வெள்ளியில் சிறப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில புற்றுக்கோவில்கள் பற்றியும் விளக்குகிறது. புற்றுக்கோவில் வழிபாட்டால் கிடைக்கும் புண்ணியத்தையும் எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்