திருமுறைகளில் பலன் தரும் பாடல்களை விளக்கும் நுால். தேவார பெருமைகளையும், சிவபெருமான் சிறப்புகளையும் எடுத்தியம்புகிறது.
மூவர் பாடிய திருத்தலங்களின் மேன்மை விவரிக்கப்பட்டுள்ளது. திருநீற்றின் பெருமையை சொல்கிறது. பசி போக, நவக்கிரகங்களால் வரும் தீங்கு போக, குடல் நோய் நீங்க, ஆபத்து நீங்க எந்தந்த பதிகங்களை படிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
பதிகங்கள் பாடியதால் நிகழ்ந்த அற்புதம் பற்றி கூறுகிறது. தேர்ந்தெடுத்த தேவாரப் பாடல்களுக்கு தெளிந்த விளக்கம் தருகிறது. தேவையான இடங்களில் பொருத்தமான படங்கள் உள்ளன. தேவாரத்தின் சிறப்புகளை அறிய தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்