தமிழ் இலக்கியமான கொன்றை வேந்தன் அறக்கருத்தை சிறுகதைகளாக தரும் நுால். பழந்தமிழ் புலவர் அவ்வையார் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது.
இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தும் வகையில் கதாபாத்திரங்களை உருவாக்கி, தனித்தன்மையுடன் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. முதல் கதை அன்பான குடும்பச் சூழலை எடுத்தரைத்து, ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
குடும்பத்தில் ஒருவர் மீது கொள்ளும் நன்மதிப்பு, பொருளாதார அளவுகோலின்படி கூடாது என்பதை, ‘கீழோர் ஆயினும் தாழ உரை’ என அறக்கருத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மாணவ – மாணவியர் படித்து உணர வேண்டிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து