புது மாதிரி அமைந்த பேய் கதைகளின் தொகுப்பு நுால்.
ஒரு கதைக்கும் அடுத்ததற்கும் தொடர்பு இல்லை. ஒன்றைப் படித்ததும் அடுத்து படிக்கும் துாண்டுதல் உருவாகிறது. ஒவ்வொரு விதத்தில் ஆச்சரியம் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து ஆற்றலின் சிறப்பை உணர்த்துகிறது. ‘யாரடி நீ மோகினி’ என்ற தலைப்பிலான கதையில் காதல் சுவை கொட்டுகிறது. முடிவில் அதிர்ச்சி தருகிறது.
அடுத்தது, காதல் பொய்த்ததற்காக விஷம் குடித்த பெண், ஆவியாக வந்து செய்யும் அட்டகாசங்கள். காதலில் ஏமாறவும், ஏமாற்றவும் கூடாது என்ற நீதி போதனை சொல்லப்பட்டுள்ளது. ஆவி அன்றே கொல்லும் என்று சொல்கிறது ஒரு கதை. படைத்தல், காத்தல், அழித்தலின் ரகசியம் பேசப்பட்டுள்ளது. ஆவலை துாண்டும் வகையிலான கதை நுால்.
– சீத்தலைச்சாத்தன்