ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். புதுமையாக கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விண்ணுலகில் துவங்கி, மண்ணுலக நிகழ்வுகளை இணைத்து, இறைவியை மண்ணுலகிற்கு கொண்டு வந்திருப்பதாக கூறுகிறது. வெறும் கற்பனையுடன் மட்டுமல்லாமல், நிகழ்காலத்தில் நடமாடும் ஒருவரை முக்கிய பாத்திரமாக சித்தரித்துள்ளது. மக்களுக்குச் செய்து வரும் சேவையை அறியச் செய்கிறது.
இடையிடையே தெய்வங்களை உரையாட வைத்திருப்பது புதுமை. மனிதர்களுக்கு சோதனை வரும் காலங்களில் கடவுள் எப்படி வந்து கைகொடுப்பார் என்பது விளக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்கள் நிறைந்த ஆன்மிக நுாலாக மலர்ந்துள்ளது.
– இளங்கோவன்