இலங்கைத் தமிழர் மொழியில் அமைந்துள்ள நாவல். வாசிக்கும் போது கதாபாத்திரங்கள் உள்ளத்தில் பதிந்து நங்கூரமிட்டு விடுகின்றன.
இலங்கை தமிழர் போராட்டம் தான் மையக்கருவாக உள்ளது. அப்போது நிகழ்ந்த துயரங்கள், பின் விளைவால் ஏற்பட்ட அவலங்கள், சொந்த நாட்டை விட்டு விட்டு, பிற தேசங்களில் தஞ்சம் புகுந்தது என்று அடுக்கடுக்காய் சம்பவங்களை கோர்த்து அணிவகுக்கிறது.
அறிவும், அனுபவமும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது. மாந்தர்களின் மன ஓட்டத்தை விவரித்து சொல்லும் அழகு சிலாகிக்கும் படியாக உள்ளது. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துணிவோடும் தெளிவோடும் சந்திப்போரே வெற்றியாளர் என்று உணர வைக்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்