இலங்கை மலையக கிராமத்தை களமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். இனிய காதல் ஓவியமாக மலர்ந்துள்ளது.
மலையகம் வாழ்வதற்கு அருகதையற்ற இடம் என எண்ணி ஒதுக்கப்படுகிறது. தொன்மைக் கலாசார பின்னணியுள்ள மக்கள் கூட்டம் இங்கு வசித்தது. உழைப்பு சுரண்டலால், உரமின்றி அவதிப்பட்ட குழுவில் ஒரு பட்டதாரியும் இருந்தான். அவன் சுயமுகவரியை இழக்க விரும்பவில்லை.
அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படுகிறான். அங்கு பணியாற்றும் சிறந்த ஆசிரியையை சந்திக்கிறான். அவளோ உயர் குடி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். இருவரும் காதல் கொள்கின்றனர். மற்றொரு பெண்ணும் அவனை விரும்புவது மனப்போராட்டத்துக்கு வழி வகுக்கிறது. இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்