நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய நுால்.
ஆன்மிகம் விரும்புவோரும், பக்தர்களும் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் தரும் அற்புதங்களை எளிய நடையில் எடுத்து சொல்கிறது. படிக்கும்போது மனதில் தெய்வீக அருள் சுரக்கிறது; தெய்வீக மணம் மனதில் நிறைகிறது.
ஒவ்வொரு இல்லத்திலும் பாதுகாக்க வேண்டிய அற்புத பெட்டகம். சித்தர்களை, ஞானிகளைப் பற்றி விளக்குவதுடன், அருள் தரும் கோவில்கள் எங்கெங்கு இருக்கின்றன என்ற குறிப்பு பேருதவியாக உள்ளது. ஆன்மிக பெருமையை தருகிறது. பாதுகாக்க வேண்டிய நுால்.
– இளங்கோவன்