ஜாதி, மத வேறுபாடுகளுக்கு எதிரான மெய்ஞானி வள்ளலார் வாழ்க்கையை ஆராய்ந்து தகவல்களை தொகுத்துள்ள நுால். சைவ அறிஞராக, கவிதை மனதுடன் செய்யப்பட்டது தெளிவாக தரப்பட்டுள்ளது.
பேதங்களை மறுத்து சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்த செயல்பாடுகளை நிகழ்வுகள் வாயிலாக அறியத்தருகிறது. சடங்குகளை துாற்றி, இறைப் பேராற்றலை ஒளியாக கண்டதை விளக்குகிறது. சத்திய ஞான சபை, தர்மசாலை நிறுவியது குறித்த விபரங்களை தருகிறது.
மக்களின் பசியை போக்கி, அறிவுப்பசி உருவாக்கிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வள்ளலாரின் பிறப்பு துவங்கி, குழந்தை பருவம், கல்வி பயிற்சி, இல்லறம், ஆன்மிகப்பணி, இலக்கிய பங்களிப்பு, சமூக பணி என, பல கோணங்களில் ஆராய்ந்து தகவல்களை தரும் நுால்.
– மதி