மெய்ஞ்ஞானத்தை அடைய வழிகாட்டும் நுால்.
முக்தி நிலையையும் அடைய வைக்கும் விஞ்ஞானமாகவே தந்திர யோகம் பார்க்கப்படுவதை விளக்குகிறது. அக ஒளி ஏற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதை குறிப்பிடுகிறது. ஆண் – பெண் தத்துவத்தை புரிந்து சாதகர்கள் தெய்வீக காரியமாக செயல்படுத்தி வருவதை குறிப்பிடுகிறது.
உடல் இயக்கம், யோக நிலை ஆலிங்கனம், பஞ்சபூதங்களின் கலவை, முத்திரைகளோடு தியானம் செய்யும்போது மனம் ஒருமுகப்படுதல், முத்திரை கலை பயிற்சிகள் குறித்தும் விரிவாக விளக்குகிறது. தியான முறையில் இறைவனின் பரவச நிலையைக் காண்பதற்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்