சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் இளைஞரின் திறனை விவரிக்கும் நாவல்.
மாஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஜமீன்தார் சேனாதிபதி, சுலபமான வழிமுறையில் தமிழகத்தை ஆக்கப்பூர்வமாக வழிநடத்துவதாக கூறுகிறது. இவரின் நட்பு ஒரு ஏழைக்கு கிடைக்கிறது. சேனாதிபதியின் பணக்கார சிந்தனை, ஏழைகள் பக்கம் திரும்ப காரணமாக காமராஜர் செயல் அமைந்ததாக தெளிவுரைக்கிறது.
அந்த செயல் இளைஞர்களை எப்படி ஈர்க்கிறது என்பதுடன் பாதிக்கப்பட்டோருக்கு, பணம் படைத்தோர் உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. உணவு, கல்வி, மருத்துவ சேவையால் ஏற்றத்தாழ்வை போக்கலாம் என்கிறது. ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் சமூக மறுமலர்ச்சியை வலியுறுத்தும் நாவல் நுால்.
– டி.எஸ்.ராயன்