மலைவாழ் மக்களின் வறுமையை செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதை மையமாக்கிய நாவல்.
சட்ட விரோதம் எனத் தெரியாமல் காவல்துறையிடம் அப்பாவி தொழிலாளி மாட்டிக்கொள்ளும் அவலம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை, செம்மரக்கடத்தலுக்கு சென்றபோது சிறையில் தள்ளப்படுகிறார். தந்தை என்ன ஆனார் என தெரியாமல் மகள்கள் தவிக்கின்றனர்.
ஆதரவற்ற இருவரும் வீட்டிலிருந்து விரட்டப்படுகின்றனர். சிறுமியருக்கு ஒரு ஆசிரியர் அடைக்கலம் கொடுத்து படிக்க வைக்கிறார். படிப்பில் உச்சம் பெற்று வாழ்வில் சாதிப்பதை மையப்படுத்தி விறுவிறுப்பாக நகர்கிறது நாவல்.
– புலவர் சு.மதியழகன்