மனித எதிர்மறை சிந்தனைகளை அடுக்கும் நுால். விலங்கு, பறவை நற்குணங்கள் மனிதருக்கு தேவையென்கிறது.
நாய் போல் துாக்கம், மாடு போல் தீனி, புலி போல் பசி, குதிரை போல் ஓய்வு, கழுதை போல் சுமை, கரப்பான் பூச்சி ஆயுள், பாம்பாகச் சினம், எருமையாக அமைதி, யானை நடை, முதலை விழிப்பு, காகத்தின் குரல் போன்ற விலங்கு பண்புகள் மனிதனுக்கு தேவை என்கிறது.
சிங்கம் சேற்றில் புரளும்; வேட்டையாடி சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், புலி சுத்தம் பேணும்; பசித்தால் மட்டுமே வேட்டையாடி உண்ணும். சிறுத்தை, சிங்கத்தை வேட்டையாடலாம். ஆனால் வெறியும், வேட்கையும் கொண்ட புலியை வேட்டையாட முடியாது என்கிறது. சிறந்த பண்புகளை மிருகங்களிடம் கற்க சொல்லும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்