நீதிக்கும், அநீதிக்கும் நடந்த போராட்டத்தை மையப்படுத்திய நுால்.
‘பலனை எதிர்பார்க்காதே; கடமையை செய்’ என்ற அறிவுரை சார்ந்துள்ளது. மகாபாரத சாரத்தை, அதில் கூறப்பட்டுள்ள வரலாற்றுக் கதைகளை, எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில் வழங்குகிறது. படித்ததும் குருக்ஷேத்ரம் செல்ல வேண்டும்; அந்த புனித தலத்தை தரிசிக்க வேண்டும்; புண்ணிய ஆத்மாக்கள் உலாவிய இடங்களில் சஞ்சரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தும்.
புண்ணியர்கள் மூச்சுக் காற்று பரவி இருக்கும் இடங்களுக்கு சென்று சுவாசிக்க வேண்டும் என்பது ஊற்று போல் பெருக்கெடுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இது வெறுமனே பயணக்கட்டுரையாக அல்லாமல், அனைவரின் வாழ்வுக்கும் பயனுள்ள தொகுப்பு நுால்.
–- இளங்கோவன்