ஸ்ரீராகவேந்திரர் வாழ்க்கையை விவரிக்கும் நுால். பிறந்தது முதல் பிருந்தாவனத்தில் முக்தி அடைந்தது வரை, நிகழ்வுகளை தொகுத்து தருகிறது.
ராகவேந்திரரின் முற்பிறவி, விளையும் பயிர் முளையிலே, ஸ்ரீமடத்தில் தஞ்சம், மத்வ சித்தாந்தத்தின் விளக்கம், மடாதிபதி பொறுப்பு உட்பட, 45 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுவாமியின் குருகுலவாசம், சன்னியாசம் ஏற்றுக் கொள்ளுதல், மடாதிபதியாதல், மனைவியின் மரணம் என, சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.
‘ஒருவர் கடவுள் தன்மை அடையலாமே தவிர, கடவுளாக முடியாது’ என்ற தத்துவத்தை விளக்குகிறது. பக்தி ஒன்று தான் மனிதர்களை வழி நடத்தும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. வணங்கினால் அற்புதங்கள் நிகழும் என அனுபவமாக விளக்கும் நுால்.
– -பேராசிரியர் ரா.நாராயணன்