கடந்த, 1970களில் எழுதத் துவங்கியவர், கிம் யாங் – ஷிக். இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், இந்திய அரசின் உயரிய விருதைப் பெற்றவர்.
முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், ஜெயில் சிங், நாராயணன் ஆகியோராலும், முன்னாள் பிரதமர் இந்திரா முதலானோராலும் பாராட்டப் பெற்றவர், கிம் யாங் – ஷிக் என்னும் இந்தப் பெண் கவிஞர். அவர் கொரிய மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பை, பவள சங்கரி அழகாக வழங்கியுள்ளார்.
மலையும் ஆறும் இந்தக் கவிஞரது கவிதை வெளிகளாகின்றன. இந்தியாவைப் பற்றிய கவிதைகளும் இந்த நுாலில் உள்ளன. இந்த நுாலானது கொரிய பண்பாட்டையும், தமிழ் பண்பாட்டையும் இணைக்கும் பாலமாக இருக்கும்.
– முகிலை இராசபாண்டியன்