முகப்பு » கட்டுரைகள் » ஆறுபடை வீடுகளுக்கு

ஆறுபடை வீடுகளுக்கு இனிய பாதயாத்திரை

விலைரூ.70

ஆசிரியர் : கவிஞர் எஸ்.குருசாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்க நுால். பாதயாத்திரையில் ஏற்பட்ட அருள் அனுபவத்தால் படைத்த, 36 பக்திப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள் எழுதிய இடங்களும், தருணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆறு படை வீடுகளுக்கு சவால் நிறைந்த பாதயாத்திரை சென்று வர கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை எடுக்கும் என்கிறது. செருப்பு அணியாமல், 1,500 கி.மீ., பயணம் பற்றி விவரித்து பிரமிக்க வைக்கிறது.

நெடிய பாதயாத்திரையில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவு தங்கிய இடமும் பட்டியலிடப்பட்டுள்ளது. அற்புதமான முருக பக்தரின், அதிசயமான ஆன்மிக பயண அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us