உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத் துறந்து, மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழியைக் காண முற்பட்டு அதில் வெற்றி கண்டவர். அவருடைய அறவழிகள் ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவின.
புத்தர் பெருமானின் இந்தச் சரித்திரம் பலவகை நோக்கத்தால் மூலநுாலாக விளங்குகிறது.
அதை, தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
தங்கு தடையற்ற சரளமான மொழியாக்கம், அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு செய்துள்ளது சாகித்திய அகாதெமி.
– பிரபு