உயில் எழுதத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து நியாயப்படுத்திய விதமும், உயில் எழுத வேண்டும் என்ற முடிவை எடுத்தால் எப்படி செயல்படுத்துவது என்ற விளக்கமும் பாராட்டுக்குரியன. சட்ட உயில் கூறுகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு, சாமானியன் எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார், ஆசிரியர் வரதராஜன். பிரபலங்களின் உயில் சுருக்கமும், தானப் பத்திரம் பற்றிய செய்திகளும் இந்நுாலுக்கு மகுடம் சேர்க்கின்றன.