முகப்பு » கட்டுரைகள் » யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

விலைரூ.200

ஆசிரியர் : மறைமலை அடிகள்

வெளியீடு: பாலாஜி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் கட்டுரைத்தல் ஆகிய தலைப்புகளில் மனோவசிய முறைகளை விளக்கியுள்ளார்.
நினைவு துயில், நினைவற்ற துயில், நடை துயில் என துாக்கத்தை விளக்குகிறார். தண்ணீரில் மின்சாரத்தை ஏற்றி தருவதே, தண்ணீர் மந்திரித்தல், இந்த மயக்கம் ஊட்டல் மனோவசிய முறையில் தீய பழக்கங்களையும், நோய்களையும் குணப்படுத்தலாம் என்கிறார். அனாவசியமாக பேசுவோரை மாற்ற இந்த நுால் அவசியம்!
– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us