முகப்பு » கதைகள் » துாது நீ சொல்லிவாராய்...

துாது நீ சொல்லிவாராய்...

விலைரூ.250

ஆசிரியர் : கோவி.மணிசேகரன்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாதவாகனர்கள் தற்போதைய ஆந்திரா, தெலுங்கானாப் பகுதியையும் ஆட்சி செய்தவர்கள். இவர்கள் மொழியாகத் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் இருந்ததாக அறிய முடிகிறது. தெலுங்கும் இவர்களது மொழி என்று கூறுகிறார்கள்.
ஆனால் சாதவாகனர்களின் காலம் கி.பி., 1ம் நுாற்றாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அக்காலத்தில் தெலுங்கு மொழி தோன்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.  சாதவாகனர்களுக்கும், பாண்டிய மன்னர்களுக்கும் இருந்த தொடர்பை விளக்குகிறது, இந்த நுால்.
சாதவாகன இளவரசனுக்கும், பாண்டிய இளவரசிக்கும் ஏற்பட்ட காதலுக்கு துாதாகப் புறா இருந்ததைச் சந்தத் தமிழ் நடையில் விளக்கியுள்ளார். சாதவாகன வம்சத்தைச் சேர்ந்த வலம்புரித் தேவன், பாண்டிய இளவரசியை மணந்து கொண்டதால், பாண்டிய பேரரசன் ஆவதாக வரலாற்றை விவரித்துள்ளார்.
பொற்கைப் பாண்டியன் என்னும் குலசேகரப் பாண்டியனைச் சுற்றிச் சுழல்கிறது. அனைவரும்  படிக்க வேண்டிய வரலாற்று நாவல்.
– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us