இந்த புத்தகம் மூன்று ரத்தினங்கள் பற்றி சுருக்கமாக பேசுகிறது. இறையருள் பெற்ற முருகன் அடியார்களை, முருகு ரத்தினங்கள் என, குறிப்பிடுகிறது. இறை நெருக்கம் பெற்ற பாண்டுரங்க பக்தர்களை, ரங்க ரத்தினங்கள் என, புகழ்கிறது. பிரபல சங்கீத பாடகர்களை ஸாஹித்திய ரத்தினம் என, துதி பாடுகிறது.
இப்படி ரத்தினங்களாக திகழ்ந்த அடியார்கள், பக்தர்கள், பாடகர்கள், மஹான்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய சுருக்கமான விபரம் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வண்ணப் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. ஸாஹித்திய ரத்தினங்களில் ஆறு பேர் பற்றிய குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அடியாரை போற்றுவோருக்கு உதவும்.