அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை விதிகளை அறியாத அரசு ஊழியர்கள் தான், அதிகாரம் படைத்தவர் போல் சக ஊழியர்களையும், மக்களையும் மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுவர் என சுட்டிக்காட்டி, அரசு பணியாளர் தவறு செய்யும் பட்சத்தில், என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விவரிக்கிறது.
அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கியுள்ள நுால்.