முகப்பு » ஆன்மிகம் » வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்

வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்

விலைரூ.180

ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சாரியா

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அம்பிகையின் வரலாற்றையும், பெருமைகளையும் முழுமையாகச் சொல்லும் நுால். பகவத் கீதை, மகாபாரதத்தின் நடுவே 700 சுலோகங்களுடன் உள்ளது. அது போல மார்க்கண்டேய புராணத்தின் நடுவே 700 மந்திரங்களுடன் அமைந்துள்ளது.

பூர்வ பாகத்தில் தேவி கவசம், அர்கலா தோத்திரம், மதுகைடப வதம், மகிஷாசுர வதம், துாம்ர லோசன வதம், சண்ட முண்டர்கள் வதம், ரக்த பீஜ வதம், சும்ப, நிசும்ப வதம் ஆகியன உள்ளன. உத்தர பாகத்தில் நவாட்சரி, தேவிசூக்தம், பிரதானிக, வைக்ருதிக, மூர்த்தி ரகசியங்கள் உள்ளன. தேவி புனிதரின் வீடுகளில் லட்சுமி ஆகவும், பாவிகளின் வீடுகளில் மூதேவி ஆகவும், சத்திய சீலரின் வீடுகளில் சிரத்தையாகவும், நல்லோரின் வீடுகளில் தன்னடக்கம் ஆகவும் இருப்பதாக தேவி துதி கூறுகிறது. அம்பிகையின் அருள் தரும் சக்திமிக்க பக்தி நுால்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us