பழய பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்த்தாலே அளவில்லா அற்புதங்கள் நிறைந்துள்ளதை பதிவு செய்யும் நுால்.
ஏன் விழாக்கள் கொண்டாடுகிறோம். வாழை இலையில் உண்பது எதனால்... பல்லங்குழி விளையாட்டு எதற்கு... பெண்கள் கைகளில் மருதாணி வைப்பதேன்... அரை ஞாண் கயிறு கட்டுவது எதற்கு... ஏன் மூக்குத்தி போட வேண்டும்... தலைப்பிள்ளைக்கு மின்னல் ஆகாது ஏன்... என பல்வேறு 66 பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல் விளக்கங்களை அள்ளி தெளித்துள்ளார் இளைய சமுதாயம் பாரம்பரிய மிக்க நமது பண்பாட்டை படித்து தெரிந்துகொள்ளும் விதமாக, மறக்காமல் அறிவியலுடன் கைகோர்த்து அற்புதமாக்கியுள்ளார்.
தேசிய தெய்வீக சிந்தனைகளை அள்ளி தெளித்து அருமையாக தெளிவுபடுத்தி எழுதபட்டுள்ள படைப்பு.
– ஆ.நடராஜன்