முகப்பு » கட்டுரைகள் » வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

விலைரூ.140

ஆசிரியர் : ஆ.இரா.வெங்கடாசலபதி

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., மகாத்மா காந்தி இடையே நடந்த கடிதப்போக்குவரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘வ.உ.சி.,யை ஏமாற்றினாரா காந்தி’ என்ற தலைப்பிலான முன்னுரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, வ.உ.சி., சிறையை நோக்கி..., தென் ஆப்ரிக்கத் தமிழர், கணக்கும் வழக்கும் என, மூன்று கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
முடிவுரை, காவியப் பொருத்தம் என்ற தலைப்பில் எழுதப்பட்டு உள்ளது. பின்னிணைப்புகள் தனியாக தரப்பட்டுள்ளன. காந்தி – வ.உ.சி., இடையே நடந்த கருத்து பரிமாற்ற தொடர்பில், 18 கடிதங்களை கண்டெடுத்து ஆராய்ந்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது. சுதந்திர போராட்டக் காலத்தின் ஒரு பகுதியை, தக்க தரவுகளுடன் பேசும் நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us