முகப்பு » கட்டுரைகள் » சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர்

விலைரூ.170

ஆசிரியர் : க.மோகன்காந்தி

வெளியீடு: பாரதி புக் ஹவுஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.

மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் காட்டும் போது, முன்னோர் சேமித்த செல்வம் இருந்தாலும், உழைப்பால் வந்த செல்வத்தை மதித்துள்ளனர் என்ற செய்தி சுவாரசியமானது. பண்டமாற்று முறை, மற்ற நாடுகளுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிப தொடர்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது. கட்டுரைகளில் துணை சேர்க்கும் வகையில் படங்களும், சான்றுப் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழர் வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிய உதவும் நுால்.
முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us