பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் கோதே எழுதிய படைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கதைக்கு பொருத்தமாக கற்பனையை துாண்டும் வகையில் ஓவியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை ஓவியர் ருடால்ப் ஸ்டைனர் வரைந்துள்ளார். பஞ்சதந்திர பாணியில் இருந்தாலும், கதை தொடர்ச்சியான அறங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதை வாசிப்பதால் வளர்ச்சியின் பாதை மனதில் பதிய வாய்ப்பு உள்ளது. மிக எளிய நடையில் உட்கரு உணர்த்தப்பட்டுள்ளது. புதிய திசையில் சிந்தனையை துாண்டும் நுால். – மலர்