கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை, 30- அந்தாதி பாடல்கள் மூலம் பாடியுள்ளார் கம்பர். காப்புச் செய்யுள் இரண்டும் சேர்த்து 32 பாடல்கள் உள்ளன. அவற்றுக்கு எழுதப்பட்டுள்ள உரையுடன் கூடிய நுால்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பர். சரஸ்வதி தேவியைப் பற்றி ஒரே நுாலில் இரு அருளாளர்கள் பாடிய பாடல்களுக்கு இனிய தமிழில் உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. பதவுரை, பொழிப்புரை, சொற்பொருள் விளக்கம் என அமைந்துள்ளது.
சரஸ்வதி தேவியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு துணை செய்யும். பக்தியோடு பாராயணம் செய்ய உகந்தது.
– புலவர் இரா.நாராயணன்