முகப்பு » கதைகள் » பாட்டி சொன்ன பழங்காலக் கதைகள்

பாட்டி சொன்ன பழங்காலக் கதைகள்

விலைரூ.100

ஆசிரியர் : ஸரோஜா வைத்தியநாத அய்யர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
படங்களுடன் அமைந்த 28 கதைகளின் தொகுப்பு நுால். பழைய கதைகள் தானே பாட்டி சொல்லி இருக்க முடியும். அத்தனையும் நீதி சுமந்த கதைகள். கொழுக்கட்டை என்ற பெயரை மறந்துவிட்ட கணவனின் கதைக்கு அடுத்ததாக கொழுக்கட்டை என்ற கதை.

தங்கை நீதி முறை நடந்தாள். நிதி நிறைய சேர்ந்தது. அவளது அக்கா அவளைப்போல ஆக ஆசைப்பட்டு நீதி முறை மறந்தாள். அல்லல் பட்டாள். நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்... இது பாட்டி சொன்னாலும் நாளைக்கும் பொருந்தும்.

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் தானே. பாவிகள் திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் பாட்டி. நல்ல போதனைகள் கதைகளில் நிறைந்து இருக்கின்றன. படிக்கவும் எளிய நடை உடனடியாக புரியும் கருத்துகள். பள்ளிப் பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்கலாம்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us