முகப்பு » தத்துவம் » மனிதனின் தர்மம்

மனிதனின் தர்மம்

விலைரூ.90

ஆசிரியர் : ஆற்காடு ஸ்ரீநாத்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆன்மிகத் தத்துவங்கள் மிக எளிய நடையில் மேற்கோள்களுடன் காட்டப்பட்டுள்ள நுால். மாற்ற முடியாத விதி தாய் தந்தை சுற்றம். மாற்ற முடியாத விதி முயற்சி நண்பர்கள். மிக எளிமையான உண்மை.

காம ஆனந்தம், பிரேம் ஆனந்தம் என்ற இரண்டை சொல்கிறார். சிற்றின்பம் மிகக்குறைந்த நேரம்; அளவுக்கு மீறினால் உடலுக்கு கேடு. பேரின்பம் நேரக் கட்டுப்பாடு இல்லை; உடலுக்கும் கேடு இல்லை.

பேரானந்தத்தை தாங்கும் சக்திக்கு ஒரு குட்டி கதை. மிகவும் வயதான பெண்ணுக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு. அதைச் சொன்னால் அதிர்ச்சியில் என்ன ஆகும். ஒரு டாக்டர் மூலம் பக்குவமாகச் சொல்லப்பட வேண்டுமென முடிவு.

டாக்டர், ‘உங்களுக்கு பெரிதாக பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்...’ என்று கேட்கிறார். அந்தப் பெண், ‘பாதியை உங்களுக்குத் தருகிறேன்...’ என சொல்ல, டாக்டருக்கு மயக்கம் வருகிறது. பேரானந்தத்தைத் தாங்கும் சக்தி யாருக்கு உள்ளது என்பதை சுட்டுகிறது. நல்ல போதனைகள் நிறைந்த புத்தகம்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us