முகப்பு » உளவியல் » வாங்க மனம் விட்டுப் பேசலாம்...!

வாங்க மனம் விட்டுப் பேசலாம்...!

விலைரூ.150

ஆசிரியர் : நந்தவனம் சந்திரசேகரன்

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்

பகுதி: உளவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனம் குறித்த கருத்துகளை பல தலைப்புகளில் விளக்குவதாக அமைந்துள்ள நுால். அதாவது மனம் என்பது ஒரு நுட்பமான இயந்திரம் போன்றது என கூறியுள்ள ஆசிரியர், மனம் எப்போதும் நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என அறிவுறுத்துகிறார்.

மனம் என்பது மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு இல்லை. நாம் சந்திக்கும் அனைத்தும் நம் மூளையில் பதிகின்றன. இந்த பதிவுகள் தான் மனம் என்பதற்கான அடிப்படை என நுாலில் கூறப்பட்டுள்ளது. மனம் என்பதை நம் உடலில் உள்ள ஒரு உறுப்பாகக் கூற முடியாது. இவ்வாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டது மனம்.

அனைவரும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கிறார். அப்படிச் செய்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து வளமான வாழ்வு வாழலாம் என ஆலோசனை கூறியுள்ளார். மனிதன் மனம் வலிமையானால் வாழ்க்கை சிறப்பாகும். எதிர்மறை எண்ணங்களை மறந்து, எப்போதும் நேர்மறை கருத்துகளை மனம் விரும்புவது போல் அமைத்துக் கொண்டால், இன்பமுடன் வாழலாம் என வழிகாட்டும் நுால்.
முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us