எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நேதாஜியின் வீரமும் தீரமும் நிலைத்து நிற்கும் என்பதைச் சொல்லும் வரலாற்று நுால்.
ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்பது நேதாஜியின் கொள்கை. பெரும் வசதியும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்த நேதாஜி உடல்நலம் குறைந்தாலும் மன வலிமையால் போராட்ட களத்தில் சிறந்தார்.
சித்தரஞ்சன் தாஸ் தன் தளபதியாக நேதாஜியை ஏற்றார். சிறையில் இருந்தபடியே வங்கத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவர் நேதாஜி. – சீத்தலைச் சாத்தன்