வேத மந்திரங்களில் தலையான ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை நல்ல முறையில் விளக்கும் நுால். ஒரு மனிதரை, எவர் கைவிட்டாலும், தாய் ஒருபோதும் கைவிட மாட்டாள் என்ற உண்மை நெறியை, அன்னை காயத்ரியுடன் ஒப்பிட்டு குறிப்பிடுவதை மறுக்க இயலாது.
மனித குலத்தின் துன்பங்களுக்கு மூல காரணம் அறியாமை என்றும், அந்த அறியாமை இருளை விலக்கி, ஆனந்த வாழ்வை தருவது தான் காயத்ரி மந்திரங்கள் என விளக்கப்பட்டுள்ளது. காயத்ரி வாசம் செய்வது மனிதர் மனதில் என அம்மந்திரத்தின் பொருளைத் தெளிவாக விளக்குகிறது. சகல தெய்வங்களின் காயத்ரி மந்திரங்களை வரிசைப்படுத்திக் கூறுவதும், வால்மீகி பகவான் இயற்றிய காயத்ரி ராமாயணத்தைக் கூறுவதும் சிறப்பளிக்கிறது. அருமையான ஆன்மிகப் பொக்கிஷம்.
– டாக்டர் கலியன் சம்பத்து