கல்வியில் மொழி பயன்பாடு குறித்து தொடராக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு மொழிகள் குறித்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, 18 கட்டுரைகள் உள்ளன.‘கல்வி அலங்கோலம்’ என்ற தலைப்பில் முதல் கட்டுரை உள்ளது. இது, கல்வியின் நிலை குறித்த சிந்தனையை முன் வைக்கிறது.
அடுத்து, ‘இது மொழிப் பகைமையா’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. கற்பிப்பதில் மொழி பயன்பாட்டின் சிந்தனையை தீவிரமாக வெளிப்படுத்துகிறது. நவீன கால சிந்தனைக்கும் பொருத்தமான கருத்துக்கள் அமைந்த நுால். – ஒளி