அத்வைதக்கோட்பாட்டை உயர்த்திய ஆதிசங்கரரின் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகளை விவரிக்கும் நுால். கேரள மாநிலம் காலடியில் அவதரித்து, பண்டிதர்களையும், அறிஞர்களையும் வாதத்தால் வென்று கொள்கையில் உடன்படச் செய்தவர். சிருங்கேரி, ஜகந்நாதம், துவாரகை, ஜோஸ் ஆகிய இடங்களில் மடங்களை நிறுவியவர்.
விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு உரை எழுதும் பாக்கியத்தை பெற்ற நிகழ்வு, ஆதிசங்கரரின் சீடர் பெருக்கெடுத்த வெள்ளத்தில் நடந்து வந்த நிகழ்வு போன்ற அற்புதங்களை விரிவாக விளக்குகிறது. சவுந்தர்ய லஹரி, பஜகோவிந்தம், விவேக சூடாமணி, சிவானந்த லஹரியின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கு விளக்கம் எளிய நடையில் உள்ளது.
விருப்பம், விபரீதம், அகந்தை நீக்கம், உள்ளும் புறமும், பிரம்மமும் பிரபஞ்சமும், ஆன்ம சாதனை, ஞானமும் தியானமும், சிறப்புச் சிந்தனைகள் என்ற தலைப்புகளில் அத்வைத கோட்பாடு அழகுற விளக்கப்பட்டுள்ளது.
– புலவர் சு.மதியழகன்