முகப்பு » கேள்வி - பதில் » ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்

ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்

விலைரூ.85

ஆசிரியர் : என்.ஞானவேல்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முருகக் கடவுளால் பெற்ற அனுபவத்தை கேள்வி – பதில் போல் தரும் நுால்.விக்கிரகங்கள் கனவுகள் துவங்கி, சோதனைகள், வேதனைகள், சொப்பனங்கள், மஹா சிவராத்திரி, வனவாசம், காலச் சக்கரம், நம்பிக்கை, அந்த ஈசன் மேல் ஆணை, ஆறுதல் மொழிகள், அழகன் என்ற தலைப்புகளுடன் நிறைவடைகிறது.

திருநீறு பூசுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறுகிறது. கனவின் வாயிலாக கிடைத்த தகவல்கள், குறுநாவலைப் படிக்கின்ற உணர்வைத் தருகின்றன. ஆறுதல் மொழிகள் என்ற தலைப்பில் சகோதரனின் மரணம் பற்றி எழுதி இருந்த பெண்ணிற்கு, முருகனை பூஜை செய்த பின் வந்த மொழிகளை, ஆறுதலாகவும் விதியின் வழியே தான் நிகழ்ந்தது என்பதையும் விளக்குகிறது.

விதியின் சதியை மீறுவது கடினம் என்ற யதார்த்தம் பளிச்சிடுகிறது. அழகன் என்ற தலைப்பில், காதல் தோல்வியே கட்டுரை முழுதும் நீள்கிறது. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற, திருவள்ளுவரின் வாக்கின் வழியே இந்த நுாலை அணுகலாம்.
– பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us