நகரில் பணி செய்யும் பூங்கா காவலரின் மகன், கொரோனா தொற்று நோய் காலத்தில் கிராமத்துக்கு மாமா வீட்டிற்குச் சென்ற போது ஏற்படும் அனுபவத்தை கதையாக பதிவு செய்யும் நாவல். கிராமத்தில் இருந்து, ஐந்து மாதத்துக்கு பின் சென்னைக்குத் திரும்புகிறான் சிறுவன். இந்த ஐந்து மாத கால வாழ்க்கை நாவலாகப் படைக்கப்பட்டுள்ளது. சிறுவர் படிக்கும் விதத்தில் உள்ளது.
புத்தகப் படிப்பின்றி இருக்கும் ஆசிரியரையும், கிராம நுாலகத்திற்குப் புத்தகம் திரட்ட முயற்சிப்பவரையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் பிரமாண்டத்தைக் கண் முன் நிறுத்துகிறது. அதற்கு என ஓர் அத்தியாயம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் படிக்க வேண்டிய நாவல்.
– முகிலை ராசபாண்டியன்