முகப்பு » கதைகள் » பிரம்ம முகூர்த்தத்தில் மாறிப்போன மணப்பெண்

பிரம்ம முகூர்த்தத்தில் மாறிப்போன மணப்பெண்

விலைரூ.150

ஆசிரியர் : இரா.மகேந்திரகுமார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
செவி வழியாக கிடைத்த தகவலைக் கொண்டு, திருப்பம், புதிர், சென்டிமென்ட், கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ள நாவல். தாயைத் தவிர உறவுகள் அற்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த அமுதனுக்கு வரன் தேடிய அவரது நண்பர்கள், மலை கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்கின்றனர்.

அதேநேரத்தில், உறவினரான அண்ணன் மகனும், வெளிநாடு வாழ் இந்தியருக்கு மகள் புனிதவதியை மணம் முடித்து வைப்பதன் மூலம், சொத்துக்கள் வெளியே செல்லாது என்ற எண்ணத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்பட்ட பரபரப்பில் புனிதவதியின் கழுத்தில்  அமுதன் தாலி கட்டுகிறான். இது, சில நிமிடங்களில், புனிதவதியின் உறவுகளுக்குத் தெரிய வர, அந்தத் திருமணத்தை ரத்து செய்ய துடிக்கின்றனர். அதை உடனே செய்ய முடியாது; ஆறு மாத பரிகாரம் அவசியம் என்கிறார் கோவில் நிர்வாகி.

இந்த நேரத்தில், அமுதனுக்கு மலை கிராமத்தில் பார்த்த பெண் வள்ளி, திருமணம் நடக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்கிறார். இவற்றைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் நாவலாகி உள்ளன.நம்பிக்கையும், நேர்மையும் இருந்தால் வாழ்க்கையை எந்தப் புள்ளியில் இருந்தும் துவக்கலாம் என்பதை வலியுறுத்தும் நாவல்.

சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us