ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலில் தான் முடியும் என்ற பிற்போக்கான எண்ணத்தை உடைத்தெறியும் கதை நுால். ஊடகங்களில் காலம் நேரம் பார்க்காமல் ஒன்றாக பணி புரிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால் ஏற்படும் சந்தேகம் உருவாகும் குழப்பம், பணி புரியும் இடத்தில் காணப் படும் போட்டி, பொறாமை; அதன் விளைவுகள், பெற்றோரின் திடீர் திருமண ஏற்பாடு இப்படியாக பல திருப்பங்களை உள்ளடக்கி எழுதியுள்ளார் இந்திரா சவுந்தர்ராஜன்.
‘தினமலர் வாரமலர்’ இதழில் தொடர்கதையாக வெளியானது. அவருடைய 120வது தொடர்.
– இளங்கோவன்