முகப்பு » கட்டுரைகள் » பெரியார் உதிர்த்த முத்துக்கள்

பெரியார் உதிர்த்த முத்துக்கள்

விலைரூ.60

ஆசிரியர் : முல்லை பி.எல். முத்தையா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம்; அறிவுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கடைப்பிடியுங்கள் என்பது போன்ற ஈ.வெ.ரா.,வின் சிந்தனை பற்றிய சுவாரசியமான செய்திகள் அடங்கிய நுால். பெண்களுக்கு விவாகரத்து உரிமை வேண்டும் எனவும், திருமணம் என்பது ஒத்த கருத்து கொண்ட ஆண், பெண் சம்பந்தப்பட்டது; இன்ன இன்ன முறையில் தான் இந்த மண முறையை நடத்த வேண்டும் என வரையறுக்கவில்லை.

இன்றைய தேவையாக கருதுவது நாளை தேவையில்லை என சொல்லக்கூடிய அளவுக்கு பகுத்தறிவு வளர்ச்சி பெற்றுள்ளது போன்ற கருத்துகளை கொண்டுள்ளது. ராஜாஜியின் இறுதிச்சடங்கின் போது வந்த ஜனாதிபதியை சக்கர நாற்காலியில் அமர வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து கொண்டது போன்ற நிகழ்வுகளும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து, பெண்ணுரிமை பெற்ற, ஜாதிகளற்ற, சமதர்ம சமுதாயம் காண விழையும் சிந்தனையை துாண்டும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us